Monday, June 28, 2010

சன் டிவி செய்திகள் - 27 ஜூன் 2010

தமிழ் இணைய மாநாட்டின் கடைசி நாளில் நடந்த நன்றி நவிலல் விழா மற்றும் மாநாட்டின் முடிவுகள் பற்றிய ஒரு செய்திக் குறிப்பு.




நன்றி: சன் டிவி செய்திகள்

தமிழ் இணைய மாநாடு 2010 நிகழ்ச்சிகள் சிலவற்றின் ஒளிப்படங்கள்


தினமணி சென்னை - 29 ஜூன் 2010

இணைய மாநாட்டில் 110 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இம் மாநாட்டில் 500 பேர் பங்கேற்றுள்ளனர். இணைய மாநாட்டின் சிறப்பு மலரில் 130 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இணையக் கண்காட்சியை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். முகப்பரங்கில் தினமும் 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


முழு செய்திக்கு



ஒருங்குறி மற்றும் டேஸ்16 பற்றிய தினமணி செய்தி

கோவை, ஜூன் 28: தமிழில் கணினி பயன்பாட்டில் டேஸ் 16 பிட் என்கோடிங்- தொழில்நுட்பத்துக்கு மாறுவதற்கான அரசாணையை தமிழக அரசு ஜூன் 23-ம் தேதி வெளியிட்டுள்ளது.   
  இதனால், அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழ் மென்பொருள் பயன்பாட்டில் எந்தவிதத் தடையும், இடையூறுகளும் இருக்காது என்று தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் பி. டபிள்யு.சி. டேவிதார் கூறினார்.


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் இணைய மாநாட்டு நிறைவு விழாவில் பேசிய அவர், "யுனிகோட் பயன்படுத்த முடியாத அனைத்து கணினி பயன்பாட்டுக்கும் டேஸ் 16 மென்பொருள் பயன்படுத்தப்படும்' என்று கூறினார். 


முழு செய்திக்கு 

UNICODE - தினந்தந்தி 28 ஜுன் 2010

இனி தமிழ் ‘யுனிகோடு” எழுத்துருதான் தமிழக அரசின் அங்கீரிக்கப்பட்ட அதிகாரப்புர்வ எழுத்து குறியீடு. தமிழக அரசு உத்தரவு

Naturalised Tamil Computing - The Hindu 28 June 2010

Tamil computing must be naturalised for average user


Anyone who is able to read or write Tamil should be able to use the language easily on the computer too.

“When people see their language on the computer screen, they get excited and want to make more use of it,” points out Michael Kaplan, Programme Manager of the World Readiness Team of Microsoft Corp. Hence, “For any user it is necessary to get rid of the computer baggage that makes it harder for them to use their language on the computer naturally.”


TI2010 Exhibition - The Hindu 28 June 2010


Dinamalar-28 June 2010

கம்ப்யூட்டர் தமிழ் கட்டுரை உருவாக்க வேண்டும்


உயர்கல்வி மாணவர்கள், ஆண்டுக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் "கம்ப்யூட்டர் தமிழ்' தொடர்பான கட்டுரைகளை உருவாக்க வேண்டும்,'' என, தமிழ் இணைய மாநாட்டுக்குழு தலைவர் அனந்தகிருஷ்ணன் பேசினார்.தமிழ் இணைய மாநாடு முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா, கொடிசியா வளாகத்தில் நடந்தது. துணைமுதல்வர் ஸ்டாலின் பரிசு வழங்கினார்.

தமிழ் இணைய மாநாடு குழுத்தலைவர் அனந்தகிருஷ்ணன் பேசியதாவது:சீனா மற்றும் கொரியா நாடுகளில் விற்பனை செய்யப்படும் கம்ப்யூட்டர்கள் அனைத்திலும், அந்நாட்டு மொழியில் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. சீன, கொரிய மொழி சாப்ட்வேர் இல்லாத கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்ய அந்நாடுகளில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தமிழகத்திலும் தமிழ் சாப்ட்வேர் உள்ள கம்ப்யூட்டர்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.செயல்முறை கல்வி கற்பிப்பதில், தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. பள்ளி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கும் போதே, சமூக சேவை மீதான ஆர்வத்தையும் கம்ப்யூட்டர் வாயிலாக ஏற்படுத்த வேண்டும். ஆண்டுதோறும் ஒரு லட்சம் ஆய்வுக்கட்டுரைகளை உருவாக்கும் உயர்கல்வி மாணவர்கள், குறைந்தது 10 ஆயிரம் கட்டுரைகளையாவது "கம்ப்யூட்டர் தமிழ்' தொடர்பாக உருவாக்கி தமிழ் முன்னேற்றத்துக்காக பாடுபடவேண்டும். சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உருவாக்கப்படும் புதிய செம்மொழி உயராய்வு அலுவலகத்தில், இணைய தமிழுக்கான முழுநேர செயலகமும் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு, அனந்தகிருஷ்ணன் பேசினார்.



The Hindu-28 June 2010

The State government should provide incentives to those who carry out projects in Tamil computing, Chairman of the Board of Governors of IIT-Kanpur and local organising committee of the Tamil Internet Conference (TIC) 2010 M. Anandakrishnan said on Saturday.
About one lakh projects were taken up in colleges in the State every year. However, only a handful of them pertained to Tamil computing, he told a function to mark the distribution of prizes to students who won contests organised as part of the TIC.
Deputy Chief Minister M.K. Stalin gave away the prizes to the State-level winners and also released a special souvenir that had 130 articles. Emphasising that greater support should be given to promote the use of Tamil computing, he said that the State government should declare a policy that in the computers purchased for government departments, schools and colleges, the opening screen should be in Tamil when booted.









The Hindu 28 June 2010

Youths spread awareness of Tamil on the web


The Hindu - 27 June 2010

There is a need to convince them that Tamil computing is not a mystery

It pains to note that many Tamil scholars are yet to realise the power of computers and Internet, says T.N.C. Venkatarangan, Chair, International Forum for Information Technology in Tamil (INFITT)...

Full Article is here.

Saturday, June 26, 2010

தினத்தந்தி - 26 ஜூன் 2010 - தமிழ் மென்பொருள் சி.டி

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் புதிய தமிழ் மென்பொருள் சி.டி, மத்திய மந்திரி ராசா வெளியிட்டார்.

தினத்தந்தி - 26 ஜூன் 2010

செம்மொழி மாநாட்டு வளாகத்தில் தமிழ் இணையதள கண்காட்சி, தயாநிதிமாறன் தொடங்கி வைத்தார்.

Thursday, June 24, 2010

The Hindu - 24 June 2010

M. Anandakrishnan, chairman, Organising Committee of the Tamil Internet Conference, said that in the past 30 years the Tamil society had faced many challenges in taking the language to the computer. What needed to be done now were regulation and standardisation.
It was not enough if the participants presented papers, they must also engage in follow-up work to promote Tamil on the Internet. He asked the Union and State governments to play an important role in promoting Tamil.
Vasu Ranganathan of Pennsylvania University said 150 papers under 12 categories were chosen for presentation at the conference.
Poongothai Aladi Aruna, Tamil Nadu IT Minister, welcomed the gathering. T.N.S. Venkata Rangan, head of the International Fourm for Information Technology in Tamil, proposed a vote of thanks.
For the full story from The Hindu go here

Wednesday, June 23, 2010

The Hindu - 23 June 2010

As in the case of WCTC, the Tamil Internet Conference will see greater participation of delegates. Poongothai Aladi Aruna, Minister for Information Technology and TIC committee organiser, says that the previous editions of the TIC had seen, on an average, 150 delegates, whereas this time there will be over 450 persons. T.N.C. Venkatarangan, chairman of the International Forum for Information Technology in Tamil, says the papers will go beyond issues concerning platform software.


For the full story from The Hindu go here.

Saturday, June 19, 2010

TI2010 Competition Results Press Meet

தமிழ் இணைய மாநாடு: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான போட்டி முடிவுகள் வெளியீடு


கல்கி - 27 சூன் 2010

’உத்தமமமான’ சேவை! என்ற தலைப்பில் உத்தமம் தலைவர். தி.ந.ச.வெங்கடரங்கன் அவர்களின் பேட்டி இந்த வார கல்கி இதழில் வந்துள்ளது.


சிறுக் குறிப்பு: உத்தமம் தொடங்கப்பட்டது 2000ம் ஆண்டு அமெரிக்காவில்,  கட்டுரையில் வந்துள்ளதுப் போல் 1977ம் ஆண்டு அல்ல.

Friday, June 18, 2010

தமிழ் இணைய மாநாடு: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான போட்டி முடிவுகள் வெளியீடு

தினமணி, 18 Jun 2010 


சென்னை, ஜூன்.18: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுவதையொட்டி 3 நாட்கள் உலகத் தமிழ் இணைய மாநாடும் நடத்தப்படுகிறது. இணைய மாநாட்டின் ஒரு நிகழ்வாக கணினிவழிப் போட்டிகள் நடத்தப்பட்டன.
பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கணினி வரைகலை மற்றும் அசைகலைப் போட்டி பிப்ரவரி 12-ம் தேதி நடத்தப்பட்டது. இதில் அனைத்துப் பள்ளிகளிலிருந்தும் 8300 மாணவ, மாணவியர் பங்குபெற்றனர்.
இப்போட்டிகளில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் வெற்றியாளர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். மாநில அளவில் மொத்தம் 21 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

இதேபோல் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியரிடையே தமிழ் விக்கிப்பீடியா பற்றிய ஆர்வம் அதிகரிக்க உதவியாக தமிழ் விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள் வடிவமைக்கும் போட்டிகள் அறிவிக்கப்பட்டன. இப்போட்டிகளில் 1200 தமிழ் கட்டுரைகள் இடம்பெற்றன. போட்டியில் இடம்பெற்ற கட்டுரைகளில் மாநில அளவில் ஒன்பது வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

Thursday, June 3, 2010

தினமணி - 3 ஜூன் 2010

செம்மொழி மாநாடு: இணைய மாநாடு:இலவச அனுமதி


கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் இணைய மாநாட்டில் அனிமேஷன் துறை சார்பாக 10 அரங்குகள், தமிழ் விக்கிபீடியா தகவல் களஞ்சியம் தொடர்பாக 5 அரங்குகள் என மொத்தம் 123 அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை ஜூன் 15-ம் தேதியில் இருந்து 18-ம் தேதிக்குள் முடித்துவிட திட்டமிடப்பட்டுள்ளன.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாடும் ஜூன் 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இணையதளத்தில் தமிழ் மொழி பயன்பாடு உள்ளிட்டவை குறித்து பல்வேறு தலைப்புகளில் உள்நாட்டு-வெளிநாட்டைச் சேர்ந்த வல்லுநர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் என பலர் ஆய்வுக் கட்டுரைகளை அளிக்கின்றனர்.  மாநாட்டின் முக்கிய நிகழ்வாக தமிழ் கணினி கண்காட்சி நடத்தப்படுகிறது.

இதில் 123 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. அனைத்து அரங்குகளும் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இண்டர்நெட் வசதியுடன் சுமார் 200 முதல் 300 கணினிகள் வைக்கப்படுகின்றன.

தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் இணையதளத்தின் மூலம் மக்களைச் சென்றடைவது தொடர்பான விவரங்கள் செயல்விளக்கமாக, கணினியில் திரையிட்டு காண்பிக்கப்படும்.

கணினி கண்காட்சிக்கான அரங்குகள் அமைக்கும் பணிகளை ஜூன் 15-ம் தேதிக்குள் முடிக்கும் வகையில் இணைய மாநாட்டுக் குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். தமிழ் விக்கிபீடியா சார்பில் 5 அரங்குகளும், அனிமேஷன் துறையில் 10 அரங்குகளும் அமைக்கப்படுகின்றன.

பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் தமிழ் கணினி கண்காட்சியைப் பார்த்து ரசிக்கலாம். அனைவரும் இலவசமாக அனுமதிக்கப்படுவர் என இணைய மாநாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளரான

பி.டபிள்யூ.சி.டேவிதார் தெரிவித்தார்.

Chief Minister of Tamil Nadu writes about TI2010 in The Hindu - 3 June 2010

Below is a snippet mentioning about Tamil Internet Conference 2010 from the Article written in "The Hindu" by Hon'ble CM of Tamilnadu.


Tamil Internet Conference
Another unique aspect will be the Tamil Internet Conference 2010, which the Government of Tamil Nadu decided to hold alongside the first World Classical Tamil Conference. The objectives of the former are to showcase the development of Tamil Internet up to the present time and to identify the steps needed to increase the use of the Tamil language on the Internet; to establish a wide network between Tamil literary scholars and Tamil Internet developers; and to motivate the younger generation to use Tamil on the Internet.

We expect about 350 special invitees, speakers, delegates, and experts from 15 countries to participate in the Tamil Internet Conference. A “Tamil Computing Internet Exhibition” is being organised as an interactive module to expose and explain the latest developments and technology in Tamil Internet to common folk.

Much thought and consultation has gone into formulating the programmes of this specialised Conference. I am confident it will take Tamil to the 21st Century, based on its requirements and having in mind the rapid developments in science and technology, information technology, linguistics, anthropology, epigraphy, and other fields of knowledge.

Monday, May 31, 2010

Saturday, May 1, 2010

புதிய தலைமுறை - 15 ஏப்ரல் 2010

செம்மொழி மாநாட்டை யொட்டி நடத்தப்படும் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஓர் அங்கமாக உலகத் தமிழ் இணைய மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டையொட்டி தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ் விக்கிப்பீடியா இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான ‘விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள்’ என்ற போட்டியை நடத்துகின்றன.

தமிழ் விக்கிப்பீடியா என்று சொல்லப்படுவது இணையத்தில் இயங்கும் தகவல் களஞ்சியம். கிட்டத்தட்ட என்சைக்ளோபீடியா மாதிரியானது. என்சைக்ளோபீடியாவை ஓர் வல்லுநர் குழு உருவாக்குகிறது. ஆனால், விக்கிப்பீடியாவை மக்களே உருவாக்கலாம். யார் வேண்டுமானாலும் விக்கிப்பீடியாவில் உறுப்பினராகச் சேர்ந்து தகவல் பக்கங்களை உருவாக்க முடியும். இத்திட்டத்திற்கு ஏற்ப தகவல் பக்கங்களை எழுதும் போட்டியையே தமிழக அரசு நடத்துகிறது. கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், விளையாட்டு, வேளாண்மை, சட்டம், கல்வியியல், இயக்குநர் மருத்துவம் (பிசியோதெரப்பி), சித்த மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர், கால்நடை மருத்துவம், பல தொழில்நுட்பப் பயிலகம் என அனைத்துத் துறைகளைச் சார்ந்த அரசு, தனியார், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கல்லூரி மாணவ, மாணவியர்கள் யார் வேண்டுமானாலும் இப்போட்டியில் பங்கேற்கலாம்.

மேலும் படிக்க கீழே பார்க்கவும்:




Thursday, April 15, 2010

தினமணி - 8 ஏப்ரல் 2010


*செம்மொழி மாநாடு இன்னும் 76 நாள்கள்:- கம்பியில்லா இணைய வசதி வளாகமாகிறது 'கொடிசியா'* 

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் கொடிசியா தொழிற்காட்சி வளாகம்
கம்பியில்லா இணையதள அலைவரிசை வசதி உடைய வளாகமாக மாற்றப்படுகிறது.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாடும் ​நடத்தப்படுகிறது.
கான்பூர் ஐ.ஐ.டி தலைவர் மு.ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் தமிழ் இணைய மாநாட்டுக்
குழு அமைக்கப்பட்டுள்ளது.

கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் தற்போது குளிரூட்டப்பட்ட வசதி உள்ள 'இ'
பிளாக் அரங்கம் இணைய மாநாட்டுக்கு ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இணைய மாநாட்டையொட்டி பள்ளி,​​ கல்லூரி மாணவர்களுக்கு இணைய ​போட்டிகள் நடத்தி
முடிக்கப்பட்டுள்ளன.

இணைய மாநாடு நடைபெறும் அரங்குக்கு இணையதள இணைப்புக்காக பி.எஸ்.என்.எல் நிறுவனம்
மூலமாக கம்பி இழை கேபிள்கள் அமைக்கப்படுகின்றன.

இணைய மாநாடு நடைபெறும் அரங்கம்,​​ பத்திரிகையாளர்களுக்கான அரங்கம்,​​ பொது
தகவல் மையம் ஆகியவற்றில் துரித இணைய இணைப்பு வசதியுடன் கூடிய கணினிகள்
​நிறுவப்படுகின்றன.

மேலும் கொடிசியா தொழிற்காட்சி வளாகம் முழுவதும் கம்பியில்லா இணையதள அலைவரிசை
வசதி கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான ஆயத்தப் பணிகள் தொடர்பாக எல்காட் நிறுவன மேலாண்மை இயக்குநரும்,​​ இணைய
மாநாட்டின் உறுப்பினருமான சந்தோஷ் பாபு,​​ கொடிசியா தொழிற்காட்சி ​வளாகத்தை
வியாழக்கிழமை (08/04/10) பார்வையிட்டார்.

இணைய மாநாட்டுக்குத் தேவையான வசதிகளைச் செய்வது தொடர்பாக பி.எஸ்.என்.எல்,
தேசிய தகவல் மைய அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

இணையதள இணைப்பு,​​ அலைபேசி சேவை ஆகியவற்றுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை
மேம்படுத்த பி.எஸ்.என்.எல் அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

நன்றி:- தினமணி 

Thursday, April 1, 2010

தினத்தந்தி - 1 ஏப்ரல் 2010


“உலகத்தமிழ் இணைய மாநாடு: கல்லூரி மாணவர்களுக்கு இணையதள பக்கம் வடிவமைக்கும் போட்டி” என்ற தலைப்பில் இன்று வந்த தினத்தந்தி செய்தியை இங்கே காணலாம்.



உலகத்தமிழ் இணைய மாநாடு: கல்லூரி மாணவர்களுக்கு இணையதள பக்கம் வடிவமைக்கும் போட்டி 30-ந் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஏப்.1-

கோவை உலகத்தமிழ் மாநாட்டை முன்னிட்டு, கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் இணையதள பக்கம் (வெப்பேஜ்) வடிவமைக்கும் போட்டி நடத்தப்படுகிறது.

உலகத்தமிழ் இணைய மாநாடு

கோவை உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின்போது, உலகத்தமிழ் இணைய மாநாடும் சேர்த்து நடத்தப்படுகிறது. இந்த இணைய மாநாடு, தமிழ் மற்றும் கணினியில் தமிழின் வளர்ச்சி, அவற்றில் உள்ள வருங்கால வாய்ப்பு, இளைய தலைமுறையினருக்கு தமிழ் இணைய ஈடுபாட்டை வளர்ப்பது போன்ற கருத்துக்களை மையமாக கொண்டு அமைக்கப்படவுள்ளது.

இதன் ஒரு அங்கமாக, தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கம்ப்ïட்டர் வரைகலை மற்றும் அனிமேஷன் போட்டிகள் நடத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து, கல்லூரி மாணவர்களுக்கும் ஒரு போட்டி நடத்தப்படவுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டுக்குழுவின் கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டம், உலகத்தமிழ் இணைய மாநாட்டுக்குழு தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை, கவிஞர் கனிமொழி எம்.பி, மாநாட்டு தனி அலுவலர் அலாவுதீன், மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் தகவல்-தொழில்நுட்பத்துறை செயலாளர் டேவிதார், எல்காட் மேலாண் இயக்குனர் சந்தோஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டார்கள.

இந்த கூட்டத்தின் முடிவில் மு.ஆனந்தகிருஷ்ணன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழில் இணையபக்கம் குறைவாக.....

``உலகத்தமிழ் இணைய மாநாட்டை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நடத்தியதைப் போலவே, கல்லூரி மாணவர்களுக்கும் ஒரு போட்டியை நடத்தவிருக்கிறோம். இதில், கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம், பிசியோதெரபி, சித்தா, பல் மருத்துவம், நர்சிங், பாலிடெக்னிக் கால்நடை அறிவியல் உள்ளிட்ட 13வித கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

இணையதளத்தில், விக்கிபீடியா என்னும் தகவல் களஞ்சிய பக்கம் (வெப் பேஜ்) உள்ளது. இது அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இதில் அதிகபட்சமாக ஆங்கில மொழியில் 32 லட்சம் தகவல் பதிவுகள் உள்ளன. இந்தியாவில் அதிகபட்சமாக இந்தியில் 68 ஆயிரம் பக்கங்களும், தெலுங்கில் 44 ஆயிரம் பக்கங்களும், தமிழில் 22 ஆயிரம் பக்கங்கள் மட்டுமே உள்ளன. இதனை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கல்லூரி மாணவர்களுக்கு இப்போது போட்டி நடத்தப்படுகிறது.

போட்டி எப்படி?

இந்த போட்டியில் கலந்து கொள்ளும் கல்லூரி மாணவர்கள், தமிழகத்தில்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், விக்கிபீடியாவில் இடம்பெறத்தக்க கட்டுரைகளை, 250 முதல் 500 வார்த்தைகளுக்கு மிகாமல், இன்டர்நெட் மூலமாக தமிழில் எங்களுக்கு அனுப்பி வைக்கலாம். இதற்காக ஆன்லைனில் எங்கள் இணையதளத்திலேயே (ஷ்ஷ்ஷ்.åணீனீவீறீவீஸீå2010.åஸீ.ரீஷீஸ்.வீஸீ.) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் அனுப்பும் கட்டுரைகள், சொந்தமானவையாக இருக்கவேண்டும். தனிப்பட்ட நபர்கள், அரசியல், மத விமர்சனம் போன்ற ஆட்சேபகரமானவற்றை அனுப்பக்கூடாது. அவரவர் படிக்கும் துறை பற்றி எழுதலாம். தகவல் பக்கங்கள் ஒருங்குறியில் (யுனிகோட்) அமையவேண்டும். வெற்றி பெறுவோருக்கு சிறப்பான பரிசுகள் வழங்கப்படும்.

இவ்வாறு ஆனந்தகிருஷ்ணன் கூறினார்.

`யுனிகோடுக்கு' மாற 7 பேர் குழு அமைப்பு

``இணைய மாநாட்டை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் 8,300 மாணவர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு விரைவில் பரிசுகள் அளிக்கப்படும்'' என்று அமைச்சர் பூங்கோதை தெரிவித்தார்.

``விக்கிபீடியா என்பது தனி அமைப்பு. தமிழக அரசுதான் இதில் முதல்முறையாக அக்கறையெடுத்து மாணவர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்திருக்கிறது. தமிழக அரசு அலுவலகங்களில் `ïனிகோட்' எழுத்துறுவை `பான்ட்' கொண்டு வரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. (இதனால் இணையதளத்தில் தமிழில் அனுப்பப்படும் தகவல்களை தமிழ் எழுத்துறு இல்லாமலேயே ஒருவர் அப்படியே படித்துவிட முடியும். அதை படிப்பதற்காக ஒரு எழுத்துறுவை `டவுன்லோடு' செய்ய தேவையில்லை. ïனிகோட் மிக எளிமையானது). இதுபற்றி முடிவெடுக்க 7 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. உலகத்தமிழ் மாநாட்டுக்கு முன்னதாக இப்பணி முடிக்கப்படும்'' என்று டேவிதார் தெரிவித்தார்.

அப்போது கவிஞர் கனிமொழி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.






Free Tamil Unicode Fonts from TDIL (Govt. Of India)

Government of India through their TDIL Data Centre has released few years back several UNICODE Compliant Tamil Fonts for free. In the interest of users, we have given below an image showing the various font faces made available in the package from TDIL. You can download the fonts for Windows & Linux OS from here: http://www.ildc.gov.in/GIST/htm/otfonts.htm


பயனாளர்களுக்கு வசதியாக இருபதுக்கும் மேற்பட்ட இலவசனமான ஒருங்குறியீட்டு தமிழ் எழுத்துருக்கள் தேர்வு செய்து இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது. இவை இந்திய மொழிகள் தொழில்நுட்ப வளர்ச்சித்துறையின் (TDIL) தகவல் தொழில் நுட்ப திணைக்களத்தின் தளத்தில் (DIT) - www.ildc.gov.in இருந்துப் பெறப்பட்டது.

தினமலர் சென்னை - 1 ஏப்ரல் 2010

General India news in detail
“விக்கிபீடியா நிறுவனத்துடன் இணைந்து தமிழ் தகவல் பக்கங்கள் திரட்டும் போட்டி” என்ற தலைப்பில் இன்று வந்த தினமலர் செய்தியை இங்கே காணலாம்.

Wednesday, March 31, 2010

தமிழ் இணைய மாநாடு 2010 பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்குரிய கட்டுரைப் போட்டி


தமிழ் விக்கிப்பீடியா (http://ta.wikipedia.org) என்பது பயனர்களால் கூட்டாக ஆக்கப்படும் ஓர் கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியத் திட்டம்.தமிழில் விரிவான, தரமான பல்துறைக் கலைக் களஞ்சியம் ஒன்றை உருவாக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் செயற்படுகிறது. இத்திட்டத்துக்கு ஏற்ற கட்டுரைகளை எழுதும் போட்டியைத் தமிழக அரசு தமிழ் விக்கிப்பீடியாவுடன் இணைந்து நடத்துகிறது.

பின்வரும் துறைகளைச் சார்ந்த கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து போட்டிக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. ஒவ்வொரு துறைக்குமான சில எடுத்துக்காட்டுத் தலைப்புகளை அடைப்புக்குறிகளில் காணலாம். விளையாட்டு வீரர்கள் என்ற அடிப்படைத் தலைப்பைக் கொண்டு கிரிக்கெட், கால்பந்து போன்ற பல்வேறு விளையாட்டு வீரர்களைப் பற்றியும் தனித்தனிக் கட்டுரைகளாக எழுதலாம். அதே போல் இத்துறைகளின் கீழ் அடங்கக்கூடிய எத்தலைப்பைப் பற்றியும் எழுதலாம்.

இவை எடுத்துக்காட்டுத் தலைப்புகள் மட்டுமே:
· பொறியியல் (அண்மைய கருவிகள் - தொழில்நுட்பங்கள், பொறியியல் விதிகள்)
· மருத்துவம் (நோய்கள், மருத்துவ முறைகள், உளவியல், மனித உடற்கூறியல்)
· கால்நடை மருத்துவம் (விலங்குகள், விலங்கு நோய்கள், விலங்கு உடற்கூறியல்)
· சட்டம் (பன்னாட்டுச் சட்டம், சட்ட முறைகள்)
· கலை மற்றும் அறிவியல் (விடுதலைப் போர்கள், பொருளாதார விதிகள், புவி அமைப்பு, இலக்கியம், அறிவியல் விதிகள், அறிவியலாளர்கள்)
· விளையாட்டு (விளையாட்டு வீரர்கள், விளையாட்டுகள் வரலாறு, விளையாட்டுகளின் விதிகள்)
· வேளாண்மை (தாவரங்கள், தாவர நோய்கள், உழவு முறைகள், நவீன வேளாண்மை)
· கல்வியியல் (சமச்சீர் கல்வி, தமிழ்வழிக் கல்வி, ஆங்கிலவழிக் கல்வி) மேலே குறிப்பிட்ட எட்டு துறைகளிலும், துறைக்கு 3 பரிசுகள் என 24 பரிசுகள் உள்ளன

கூடுதல் விவரங்களுக்கும் பதிவுச்செய்யவும் பார்க்க:http://www.tamilint2010.tn.gov.in

போட்டிக்கான விக்கிப்பீடியா பக்கத்து செல்ல இங்கே சொடுக்கவும்

The Hindu - 1 April 2010


CHENNAI: The State government has decided to conduct a contest for college students to increase the Tamil content in Wikipedia, the free online encyclopaedia.

The contest will be held as a prelude to the Tamil Internet Conference, which will be held concurrently along with the World Classical Tamil Conference at Coimbatore in June.

M. Anandakrishnan, chairman of the organising committee for the Internet Conference, said the competition was also to encourage the youth for trying and identifying online Tamil resources in their fields of specialisation and areas of interest. Explaining the rationale behind the contest, Professor Anandakrishnan said there were
about 22,000 Tamil entries in Wikipedia, following Hindi (68,000 entries) and Telugu (47,000 entries). By deciding to hold the contest, the Tamil Nadu government was the first government to take the initiative of promoting the presence of resources in a language.

Those willing to participate in the contest should register themselves online (http:/tamilint2010.tn.gov.in) by April 30. The word length of each entry to the contest should vary from 250 words to 500 words. The entry should conform to Unicode. Selected entries would be hosted on the Tamil Wikipedia. More information could be had from the website http://ta.wikipedia.org. Earlier, he presided over a meeting of the committee. Kanimozhi, Member of Parliament; Poongothai Aladi Aruna, Information Technology Minister; P.W. C. Davidar, IT Secretary; and Anto Peter of the Tamil Computing Sangam were among those who attended the meeting.

தினமணி சென்னை - 1 ஏப்ரல் 2010

Monday, March 8, 2010

The Hindu Business Line - 8 March 2010

Tamil Wikipedia Contest on Cards for TI2010 at College level, says Tamilnadu IT Secretary Mr.P.W.C.Davidar.

Sunday, March 7, 2010

தினமணி சென்னை - 7 மார்ச்சு 2010

"விக்கிபீடியா" தமிழ் இணைய தளத்துக்கு கட்டுரை அளிக்க மாணவர்களுக்குப் போட்டி*

தமிழ் இணைய மாநாட்டில் கணினியில் தமிழ் பயன்பாடு குறித்து கல்லூரி மாணவர்களுக்குப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இப்போட்டி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஓர் அங்கமாக தமிழ் இணைய மாநாடு நடத்தப்படுகிறது. செம்மொழி மாநாட்டில் நடத்தப்படும் ஆய்வரங்கத்தைப் போல, இணைய மாநாட்டிலும் ஆய்வரங்கம் நடத்தப்படுகிறது. இதில் ஏராளமானோர் தங்கள்
ஆய்வுக் கட்டுரைகளை வாசிக்க உள்ளனர்.

இதுதவிர கணினியில் தமிழ் பயன்பாட்டை அதிகரிக்கவும், அதுபற்றி கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் புதுவிதப் போட்டி நடத்தப்படுகிறது.

இப்போட்டி குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாள்களில் வெளியாகிறது.

ஐ.ஐ.டி. கான்பூர் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் இணைய மாநாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

போட்டி குறித்து இணைய மாநாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளரும், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளருமான ப.வி.ச.டேவிதார் கூறியதாவது: கணினியில் தமிழ் பயன்பாடு குறித்து கல்லூரி மாணவர்களுக்குப் போட்டி நடத்தப்படுகிறது.
பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடைத் துறை, விளையாட்டு துறை என 7 வகை பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம்.

கணினியில் தமிழ் பயன்பாடு குறித்து பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம். கட்டுரைகள் தமிழில் இருக்க வேண்டும்.

இணையதளத்தில் தமிழின் பயன்பாட்டை அதிகரிக்க இப்போட்டி வழி செய்கிறது.

விக்கிபீடியா" தமிழ் இணையதளம்:
எந்தவொரு தகவலையும் "விக்கிபீடியா" இணையதளத்தின் மூலம் பார்த்துவிட முடியும். இந்த இணையதளத்தில், ஒவ்வொரு மொழியிலும் பல்வேறு தலைப்பில் ஏராளமான கட்டுரைகள் உள்ளன.

ஆனால், "விக்கிபீடியா" தமிழ் இணையதளத்தில் வெறும் 22,000 கட்டுரைகளே உள்ளன. இதை அதிகரித்தால் தான் இணையதளத்தில் தமிழின் பயன்பாடு அதிகமாகும்.

அந்தவகையில் கல்லூரி மாணவர்களுக்காகப் போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டியில் மாணவர்களிடம் இருந்து சுமார் 20 ஆயிரம் கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம். இந்தக் கட்டுரைகள் அனைத்தும்  "விக்கிபீடியா" தமிழ் இணையதளத்தில் பதிவு
செய்யப்படும். சிறந்த கட்டுரைகளுக்குப் பரிசுகளும் வழங்கப்படும்.

கட்டுரைகளை "யுனிகோட்" முறையில் தமிழில் தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும். போட்டி அறிவிப்பு மற்றும் இணையதளத்தில் மாணவர் பதிவு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.


நன்றி:- தினமணி

Wednesday, February 3, 2010

கட்டுரைகள் வரவேற்க சுவரொட்டி

9வது தமிழ் இணைய மாநாட்டில் இடம்பெற கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

  • கட்டுரைச் சுருக்கம் அனுப்பவேண்டிய இறுதி நாள்: 25 பிப்ரவரி 2010. 
  • ஆக்கங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: ti2010-cpc@infitt.org

Saturday, January 30, 2010

Message from Dr.M.Anandakrishnan on TI2010

கணினியில் தமிழின் வளர்ச்சி பற்றியும் தமிழ் இணைய மாநாடு 2010 பற்றியும்  பேராசிரியர் மு.ஆனந்தகிருஷ்ணன் அவர்களின் சிறிய உரை. மாநாடு பற்றி மேலும் விவரங்களுக்கு பார்க்க: www.infitt.org/ti2010


Wednesday, January 20, 2010

தினமணி சென்னை - 21 சனவரி 2010

25 ஆயிரம் சதுர அடியில் தமிழ் இணைய கண்காட்சி. தினமணி நாளிதழ் சென்னை பதிப்பு பக்கம் 7 (21 சனவரி 2010) வெளிவந்த தமிழ் இணைய மாநாடுப் பற்றியச் செய்தி.


19 சனவரி 2010 அன்று நடந்தப் பத்திரிகையாளர்கள் சந்திப்பு

தமிழ் இணைய மாநாடு 2010 பற்றிய 19 சனவரி 2010 அன்று நடந்தப் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் ஒளிப்பதிவு கீழே.

தமிழ் இணைய மாநாடு 2010 கண்காட்சி அறிவிப்பு

தமிழ்க் கணினி வளர்ச்சி  குறித்த தமிழ் மென்பொருள் கண்காட்சி கோவையில்
தமிழ் இணைய மாநாட்டில் பெறுவிருக்கின்றது.  இக்கண்காட்சி பத்தாயிரம் சதுர அடியில் நூற்றுக்கும் மேற்பட்ட  மென்பொருள்  கூடங்கள் அமைக்கப்படுகிறது.   இக்கண்காட்சியில் அனைத்துலகமும் ஈர்க்கும் அளவிற்கு மென்பொருட்கள்,  தமிழக அரசின்  மின் ஆளுகை  அரங்குகள்,  தமிழ் மல்டிமீடியா சிடி அரங்குகள், தமிழ் மென்பொருட்கள் இடம் பெறுவிருக்கின்றன.   இக்கண்காட்சியின் வாயிலாக பொதுமக்கள்  தமிழ் மென்பொருளையும் தமிழக அரசின்  தமிழ் பயன்பாடுகள் மற்றும் அலுவலக செயல்பாடுகளையும்   பயன்படுத்திப் பார்க்கலாம்.   உத்தமம் மற்றும் கணித் தமிழ்ச்சங்கம் என்ற தமிழ்க் கணினி அமைப்பும்,  தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து இக்கண்காட்சியை    நடத்தவிருக்கிறது.   இக்கண்காட்சிப் பற்றி மேலும் தகவலுக்கு  மா. ஆண்டோ பீட்டர் ktsasia@gmail.com

Tuesday, January 19, 2010

பள்ளி மாணவர்களுக்கானப் போட்டி



பள்ளி மாணவர்களுக்கானப் கணினித் தமிழ் வரைகலைப் போட்டி. மாணவர்கள் பதிவுச் செய்ய 
இங்கே செல்லவும்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் வாயிலாக தமிழ் இணைய மாநாட்டு குழுவினர் இணைந்து பல்வேறு  போட்டிகள் நடத்தத் திட்டமிட்டு சிறப்பான அளவில் தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளி மாணவர்கள் தங்கள் கணினித் திறனை வெளிப்படுத்தும் முகமாக முதன் முறையாக, மாநாட்டின் சிறப்பினை அனைவரும் பெறவேண்டும் என்ற  மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆர்வத்திற்கு இணங்க, மிகப்பெரிய அளவில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு பயிலும் தமிழகப் பள்ளிகளின் மாணவச் செல்வங்களுக்கு Paint Brush ((தூரிகை வரைவு) போட்டி நடைபெறவுள்ளது.  திருக்குறள் (அறத்துப்பால், பொருட்பால்), பழமொழி, ஆத்திசூடி என்ற இம்மூன்றனுள்   ஒன்றைத்    தேர்ந்து கொண்டு, ஒரு பாடலை வரைகலைப்பதிவை ஓரே படக்காட்சியாக Paint Brush (தூரிகை வரைவு) அல்லது அதேபோன்ற மென்பொருள்    தூரிகைச் சாதனத்தைக்        கொண்டு    45     நிமிடங்களுக்கும்  குழுப் போட்டிகளுக்கு  1 மணி நேரம் என்ற அளவில் ஒவ்வொரு மாவட்டத்தில் தெரிவு செய்த பொறியியல் கல்லூரியில் 12.02.2010 அன்று நடைபெறவிருக்கிறது. 
 
தமிழகத்திலுள்ள அனைத்து மேநிலைப் பள்ளி  மாணவச் செல்வங்களுக்கு (ANIMATION)  அசைநிலை  வரைகலை போட்டியும் நடைபெறவிருக்கிறது.   இப்போட்டிகளுக்கு பாரதியார் பாடல்கள், பாரதிதாசன் பாடல்கள், கலைஞரின் சங்கத்தமிழ் பாடல்கள் இம்மூன்றனுள் ஒன்றைத் தேர்ந்து கொண்டு ஒரு பாடலை படக்காட்சியாக அசைநிலை வரைகலை அல்லது அதே போன்ற மென்பொருள் தூரிகைச் சாதனத்தை கொண்டு ஒரு மணி நேரத்தில் ஒவ்வொரு மாவட்டத்தில் தெரிவுசெய்த பொறியியல் கல்லூரியில் 12.02.2010 அன்று நடைபெறவிருக்கிறது.   இப்போட்டிகள் முதல் சுற்றாக மாவட்ட ரீதியாக நடைப்பெற்று,  பிறகு இறுதி சுற்றாக  தமிழக அளவில்  நடைபெறவிருக்கிறது.   தமிழக அளவில்  சுமார் 8000  பள்ளிகளிலிருந்து ஏறத்தாழ 15,000 மாணவ, மாணவியர் இப்போட்டிகளில் கலந்துக்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.   வெற்றி பெறுகிறவர்களை கோவையில் நடைபெறும் இணைய மாநாட்டில் பரிசளிக்கப்படுவர்.  போட்டிகளில் வெல்லும் மாணவ, மாணவியர்களுக்கு   கண்ணையும்,  கருத்தையும்  கவரும்   தகுதியான பரிசுகளும், அதிகமான மாணவர்களை தனிப்போட்டி,  குழுப்போட்டிக்கு அனுப்பவிருக்கும் பள்ளிகளுக்கு LAPTOP  (மடிக்கணினி) பரிசும் வழங்கப்படவிருக்கிறது.

பள்ளி மாணவர்களுக்கு அமைந்தது போல தமிழகத்திலுள்ள  அனைத்து அரசு, தனியார், நிகர்நிலை, பல்கலைக்கழகங்கள்,  கலை, அறிவியல், கல்லூரிகள்,   பொறியியல், மருத்துவம், சட்டம்,  வேளாண்மை, விளையாட்டு நலம் வாரியாக  மற்றும் மாவட்ட வாரியாக தமிழ்க் கணினி போட்டிகள் நடத்தப்படவிருக்கின்றன.






மேலும்: தமிழக அரசின் அதிகாரப் பூர்வ செய்திக் குறிப்பு இங்கே.

நக்கிரன் இணையப் பதிப்பு - 20 சனவரி 2010



நக்கிரன் இணையப் பதிப்பு - 20 சனவரி 2010ல் வெளிவந்த செய்திக் குறிப்பு.




மாலை முரசு - 20 சனவரி 2010

மாலை முரசு - 20 சனவரி 2010ல் வெளிவந்த செய்திக் கட்டுரை - ”மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் வரைபடப் போட்டி. எல்லா மாவட்டங்களிலும் பிப்ரவரி 12-ந் தேதி நடத்தப்படுகிறது”.










The Hindu - 20 January 2010

Coverage in The Hindu newspaper, Chennai Edition Page 8 on 20 January 2010

தினமணி சென்னை - 20 சனவரி 2010

தினமணி நாளிதழ் சென்னை பதிப்பு பக்கம் 3 (20 சனவரி 2010) வெளிவந்த தமிழ் இணைய மாநாடுப் பற்றியச் செய்தி.







தினகரன் - 19 சனவரி 2010

செம்மொழி மாநாட்டையொட்டி மாணவர்களுக்கு ‘அனிமேஷன்’ போட்டி



கோவை:  கோவையில் வரும் ஜூனில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற
உள்ளது.  மாநாட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை,
ஓவியம் மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன. வழக்கமாக, பேப்பரில்
ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டும் போட்டிகளே நடக்கும். ஆனால், செம்மொழி
மாநாட்டில் புதுமையான முறையில், கம்ப்யூட்டரில் ஓவியம் வரையும் போட்டி
நடத்தப்படுகிறது. 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவிய போட்டியும்,
11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அனிமேஷன் போட்டியும் நடக்கிறது.

இதற்கான அறிவிப்பை சென்னை பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகம்
வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 10ம் தேதி மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட
உள்ளன. போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு செம்மொழி மாநாட்டு
மேடையில் முதல்வர் கருணாநிதி லேப்டாப் பரிசு வழங்குகிறார். இதுகுறித்து
மேலும் தகவவல்களை tamilinternetcompetition @ gmail.com என்ற மின்னஞ்சல்
முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

Sunday, January 17, 2010

தினகரன் சென்னை - 16 சனவரி 2010

தினகரன் நாளிதழ் சென்னை பதிப்பு பக்கம் 8 (16 சனவரி 2010) வெளிவந்த தமிழ் இணைய மாநாடுப் பற்றியச் செய்தி.

Friday, January 15, 2010

தினமலர் சென்னை - 14 சனவரி 2010

தினமலர் நாளிதழ் சென்னை பதிப்பு பக்கம் 4 (14 சனவரி 2010) வெளிவந்த தமிழ் இணைய மாநாடுப் பற்றியச் செய்தி.


தமிழ் இணைய மாநாட்டுக்கு ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்பு
ஜனவரி 14,2010,00:00  IST

சென்னை:கோவையில் நடைபெற உள்ள தமிழ் இணைய மாநாட்டிற்கு, ஆய்வுக்
கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள
செய்திக்குறிப்பு:கோவையில், வரும் ஜூனில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு
நடைபெற உள்ளது. அதோடு இணைந்து, உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம்,
ஒன்பதாவது தமிழ் இணைய மாநாட்டை நடத்த உள்ளது.

இணையம் வளர்க்கும் தமிழ்' என்பதை மையக் கருத்தாக கொண்டு, கருத்தரங்கம்,
சமுதாய குழுமம், கண்காட்சி ஆகிய மூன்று பிரிவுகளில் இம்மாநாடு நடைபெறும்.
தமிழ்க் கணினியம், தமிழ் இணையத்தின் அண்மைகால முன்னேற்றங்கள், சவால்கள்
குறித்து, இம்மாநாட்டில் விரிவாக விவாதிக்கும் வகையில், 300 பேர் மட்டுமே
இதில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்மாநாட்டில், ஆய்வுக் கட்டுரையைப் படிக்க விரும்புவோர், கணினியில்
தமிழ் பயன்பாடு குறித்த தங்கள் கட்டுரையின் சுருக்கத்தை, ஒரு பக்க அளவில்
தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து, ti2010-cpc@infitt.org என்ற
மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். www.infitt.org/ti2010 என்ற
இணையதளத்தில், இம்மாநாடு குறித்த தகவல்களை பெறலாம்