Showing posts with label Community. Show all posts
Showing posts with label Community. Show all posts

Wednesday, March 31, 2010

தமிழ் இணைய மாநாடு 2010 பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்குரிய கட்டுரைப் போட்டி


தமிழ் விக்கிப்பீடியா (http://ta.wikipedia.org) என்பது பயனர்களால் கூட்டாக ஆக்கப்படும் ஓர் கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியத் திட்டம்.தமிழில் விரிவான, தரமான பல்துறைக் கலைக் களஞ்சியம் ஒன்றை உருவாக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் செயற்படுகிறது. இத்திட்டத்துக்கு ஏற்ற கட்டுரைகளை எழுதும் போட்டியைத் தமிழக அரசு தமிழ் விக்கிப்பீடியாவுடன் இணைந்து நடத்துகிறது.

பின்வரும் துறைகளைச் சார்ந்த கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து போட்டிக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. ஒவ்வொரு துறைக்குமான சில எடுத்துக்காட்டுத் தலைப்புகளை அடைப்புக்குறிகளில் காணலாம். விளையாட்டு வீரர்கள் என்ற அடிப்படைத் தலைப்பைக் கொண்டு கிரிக்கெட், கால்பந்து போன்ற பல்வேறு விளையாட்டு வீரர்களைப் பற்றியும் தனித்தனிக் கட்டுரைகளாக எழுதலாம். அதே போல் இத்துறைகளின் கீழ் அடங்கக்கூடிய எத்தலைப்பைப் பற்றியும் எழுதலாம்.

இவை எடுத்துக்காட்டுத் தலைப்புகள் மட்டுமே:
· பொறியியல் (அண்மைய கருவிகள் - தொழில்நுட்பங்கள், பொறியியல் விதிகள்)
· மருத்துவம் (நோய்கள், மருத்துவ முறைகள், உளவியல், மனித உடற்கூறியல்)
· கால்நடை மருத்துவம் (விலங்குகள், விலங்கு நோய்கள், விலங்கு உடற்கூறியல்)
· சட்டம் (பன்னாட்டுச் சட்டம், சட்ட முறைகள்)
· கலை மற்றும் அறிவியல் (விடுதலைப் போர்கள், பொருளாதார விதிகள், புவி அமைப்பு, இலக்கியம், அறிவியல் விதிகள், அறிவியலாளர்கள்)
· விளையாட்டு (விளையாட்டு வீரர்கள், விளையாட்டுகள் வரலாறு, விளையாட்டுகளின் விதிகள்)
· வேளாண்மை (தாவரங்கள், தாவர நோய்கள், உழவு முறைகள், நவீன வேளாண்மை)
· கல்வியியல் (சமச்சீர் கல்வி, தமிழ்வழிக் கல்வி, ஆங்கிலவழிக் கல்வி) மேலே குறிப்பிட்ட எட்டு துறைகளிலும், துறைக்கு 3 பரிசுகள் என 24 பரிசுகள் உள்ளன

கூடுதல் விவரங்களுக்கும் பதிவுச்செய்யவும் பார்க்க:http://www.tamilint2010.tn.gov.in

போட்டிக்கான விக்கிப்பீடியா பக்கத்து செல்ல இங்கே சொடுக்கவும்

Monday, March 8, 2010

The Hindu Business Line - 8 March 2010

Tamil Wikipedia Contest on Cards for TI2010 at College level, says Tamilnadu IT Secretary Mr.P.W.C.Davidar.

Sunday, March 7, 2010

தினமணி சென்னை - 7 மார்ச்சு 2010

"விக்கிபீடியா" தமிழ் இணைய தளத்துக்கு கட்டுரை அளிக்க மாணவர்களுக்குப் போட்டி*

தமிழ் இணைய மாநாட்டில் கணினியில் தமிழ் பயன்பாடு குறித்து கல்லூரி மாணவர்களுக்குப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இப்போட்டி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஓர் அங்கமாக தமிழ் இணைய மாநாடு நடத்தப்படுகிறது. செம்மொழி மாநாட்டில் நடத்தப்படும் ஆய்வரங்கத்தைப் போல, இணைய மாநாட்டிலும் ஆய்வரங்கம் நடத்தப்படுகிறது. இதில் ஏராளமானோர் தங்கள்
ஆய்வுக் கட்டுரைகளை வாசிக்க உள்ளனர்.

இதுதவிர கணினியில் தமிழ் பயன்பாட்டை அதிகரிக்கவும், அதுபற்றி கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் புதுவிதப் போட்டி நடத்தப்படுகிறது.

இப்போட்டி குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாள்களில் வெளியாகிறது.

ஐ.ஐ.டி. கான்பூர் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் இணைய மாநாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

போட்டி குறித்து இணைய மாநாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளரும், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளருமான ப.வி.ச.டேவிதார் கூறியதாவது: கணினியில் தமிழ் பயன்பாடு குறித்து கல்லூரி மாணவர்களுக்குப் போட்டி நடத்தப்படுகிறது.
பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடைத் துறை, விளையாட்டு துறை என 7 வகை பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம்.

கணினியில் தமிழ் பயன்பாடு குறித்து பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம். கட்டுரைகள் தமிழில் இருக்க வேண்டும்.

இணையதளத்தில் தமிழின் பயன்பாட்டை அதிகரிக்க இப்போட்டி வழி செய்கிறது.

விக்கிபீடியா" தமிழ் இணையதளம்:
எந்தவொரு தகவலையும் "விக்கிபீடியா" இணையதளத்தின் மூலம் பார்த்துவிட முடியும். இந்த இணையதளத்தில், ஒவ்வொரு மொழியிலும் பல்வேறு தலைப்பில் ஏராளமான கட்டுரைகள் உள்ளன.

ஆனால், "விக்கிபீடியா" தமிழ் இணையதளத்தில் வெறும் 22,000 கட்டுரைகளே உள்ளன. இதை அதிகரித்தால் தான் இணையதளத்தில் தமிழின் பயன்பாடு அதிகமாகும்.

அந்தவகையில் கல்லூரி மாணவர்களுக்காகப் போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டியில் மாணவர்களிடம் இருந்து சுமார் 20 ஆயிரம் கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம். இந்தக் கட்டுரைகள் அனைத்தும்  "விக்கிபீடியா" தமிழ் இணையதளத்தில் பதிவு
செய்யப்படும். சிறந்த கட்டுரைகளுக்குப் பரிசுகளும் வழங்கப்படும்.

கட்டுரைகளை "யுனிகோட்" முறையில் தமிழில் தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும். போட்டி அறிவிப்பு மற்றும் இணையதளத்தில் மாணவர் பதிவு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.


நன்றி:- தினமணி

Tuesday, January 19, 2010

பள்ளி மாணவர்களுக்கானப் போட்டி



பள்ளி மாணவர்களுக்கானப் கணினித் தமிழ் வரைகலைப் போட்டி. மாணவர்கள் பதிவுச் செய்ய 
இங்கே செல்லவும்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் வாயிலாக தமிழ் இணைய மாநாட்டு குழுவினர் இணைந்து பல்வேறு  போட்டிகள் நடத்தத் திட்டமிட்டு சிறப்பான அளவில் தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளி மாணவர்கள் தங்கள் கணினித் திறனை வெளிப்படுத்தும் முகமாக முதன் முறையாக, மாநாட்டின் சிறப்பினை அனைவரும் பெறவேண்டும் என்ற  மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆர்வத்திற்கு இணங்க, மிகப்பெரிய அளவில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு பயிலும் தமிழகப் பள்ளிகளின் மாணவச் செல்வங்களுக்கு Paint Brush ((தூரிகை வரைவு) போட்டி நடைபெறவுள்ளது.  திருக்குறள் (அறத்துப்பால், பொருட்பால்), பழமொழி, ஆத்திசூடி என்ற இம்மூன்றனுள்   ஒன்றைத்    தேர்ந்து கொண்டு, ஒரு பாடலை வரைகலைப்பதிவை ஓரே படக்காட்சியாக Paint Brush (தூரிகை வரைவு) அல்லது அதேபோன்ற மென்பொருள்    தூரிகைச் சாதனத்தைக்        கொண்டு    45     நிமிடங்களுக்கும்  குழுப் போட்டிகளுக்கு  1 மணி நேரம் என்ற அளவில் ஒவ்வொரு மாவட்டத்தில் தெரிவு செய்த பொறியியல் கல்லூரியில் 12.02.2010 அன்று நடைபெறவிருக்கிறது. 
 
தமிழகத்திலுள்ள அனைத்து மேநிலைப் பள்ளி  மாணவச் செல்வங்களுக்கு (ANIMATION)  அசைநிலை  வரைகலை போட்டியும் நடைபெறவிருக்கிறது.   இப்போட்டிகளுக்கு பாரதியார் பாடல்கள், பாரதிதாசன் பாடல்கள், கலைஞரின் சங்கத்தமிழ் பாடல்கள் இம்மூன்றனுள் ஒன்றைத் தேர்ந்து கொண்டு ஒரு பாடலை படக்காட்சியாக அசைநிலை வரைகலை அல்லது அதே போன்ற மென்பொருள் தூரிகைச் சாதனத்தை கொண்டு ஒரு மணி நேரத்தில் ஒவ்வொரு மாவட்டத்தில் தெரிவுசெய்த பொறியியல் கல்லூரியில் 12.02.2010 அன்று நடைபெறவிருக்கிறது.   இப்போட்டிகள் முதல் சுற்றாக மாவட்ட ரீதியாக நடைப்பெற்று,  பிறகு இறுதி சுற்றாக  தமிழக அளவில்  நடைபெறவிருக்கிறது.   தமிழக அளவில்  சுமார் 8000  பள்ளிகளிலிருந்து ஏறத்தாழ 15,000 மாணவ, மாணவியர் இப்போட்டிகளில் கலந்துக்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.   வெற்றி பெறுகிறவர்களை கோவையில் நடைபெறும் இணைய மாநாட்டில் பரிசளிக்கப்படுவர்.  போட்டிகளில் வெல்லும் மாணவ, மாணவியர்களுக்கு   கண்ணையும்,  கருத்தையும்  கவரும்   தகுதியான பரிசுகளும், அதிகமான மாணவர்களை தனிப்போட்டி,  குழுப்போட்டிக்கு அனுப்பவிருக்கும் பள்ளிகளுக்கு LAPTOP  (மடிக்கணினி) பரிசும் வழங்கப்படவிருக்கிறது.

பள்ளி மாணவர்களுக்கு அமைந்தது போல தமிழகத்திலுள்ள  அனைத்து அரசு, தனியார், நிகர்நிலை, பல்கலைக்கழகங்கள்,  கலை, அறிவியல், கல்லூரிகள்,   பொறியியல், மருத்துவம், சட்டம்,  வேளாண்மை, விளையாட்டு நலம் வாரியாக  மற்றும் மாவட்ட வாரியாக தமிழ்க் கணினி போட்டிகள் நடத்தப்படவிருக்கின்றன.






மேலும்: தமிழக அரசின் அதிகாரப் பூர்வ செய்திக் குறிப்பு இங்கே.